காஷ்மீரில் இரு தீவிரவாதிகள் கைது!
In இந்தியா February 15, 2021 6:02 am GMT 0 Comments 1155 by : Krushnamoorthy Dushanthini

காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட முயன்ற இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
புட்காம் மாவட்டத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் மற்றும் இராணுவத்தினர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போதே லஷ்கர் இ தொய்பா மற்றும் தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரும் புல்வாமா மற்றும் குல்காம் மாவட்டங்களில் கையெறி குண்டுகளை வீசியதாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.