UPDATE சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் – உரிமையாளர் அதிரடியாக கைது!
In ஆசிரியர் தெரிவு May 5, 2019 10:05 am GMT 0 Comments 2891 by : Dhackshala
கிளிநொச்சி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கோவில் அருகே நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளொன்று காணப்படவே அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் கைது செய்யப்பட்டவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை.
சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்
கிளிநொச்சி மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி கோயிலை அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள இலக்கதகடற்ற மோட்டார் சைக்கிளொன்றினால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த பகுதியிலிருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள