கிளிநொச்சியில் துப்பாக்கிகள்- வாள்கள் மீட்பு: ஒருவர் கைது
In இலங்கை May 7, 2019 10:30 am GMT 0 Comments 2557 by : Yuganthini
கிளிநொச்சி- பூநகரி, முட்கொம்பன் பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் வாள்கள் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பூநகரி பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் பொலிஸாரும் படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கையின் இன்று ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அப்பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கிகள், ரவைகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பல பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.
பின்னர் அவ்வீட்டிலிருந்தவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்த சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் மற்றும் மோட்டார் இலக்க தகடு ஆகியவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, வியாபாரிகளார் ஆர்ப்பாட்டமொன்று
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது.
-
நீதிபதிகளின் தீர்ப்புகள் குறித்து பேசுவதற்கு நாடாளுமன்றில் உள்ள 225 பேருக்கும் அதிகாரம் உள்ளது என நா
-
நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த
-
வடக்கு மாகாணத்தில் கடந்த ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நேற்றுவரையான காலப்பகுதியில் 351 பேருக்கு கொ
-
டிக்கோயா வைத்தியசாலையின் தாதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுயதனிமைப்படுத்தப்பட
-
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது வேகமாகப் பரவிவரும் நிலையில் குறைந்தது 60 நாடுகளில
-
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை என சுகாதாரத்
-
உயர்நீதிமன்ற வளாகத்தில் மொத்தம் 04 ஊழியர்களுக்கு இன்று (புதன்கிழமை) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக
-
3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள