கிளிநொச்சியில் மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா
கிளிநொச்சி விவேகநந்தா நகரில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு கிளிநாச்சி, விவேகாநந்தா நகர் பொதுநோக்கு மண்டப வளாகத்தில் இடம்பெற்றது.
இது, 2017ஆம் ஆண்டு உயர்தரம், 2018ஆம் ஆண்டு சாதரண தரம் மற்றும் தரம்-5 புலைமைப் பரிசில் பரீட்சைகளில் தோற்றி சாதனை நிலைநாட்டிய மற்றும் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் 90 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், 22 வறிய மாணவர்களிற்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் உறவினர் ஒருவரின் உதவியுடன் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கலந்துகொண்டதுடன், முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வில் திறைமையாக கற்பித்தலை மேற்கொண்ட ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்