கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் மக்களின் குடியிருப்புக்களிற்குள் வெள்ள நீர்..!
In இலங்கை January 12, 2021 1:10 pm GMT 0 Comments 1442 by : Jeyachandran Vithushan

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் தற்காலிக வீடு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலயைில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிவாரண உதவிகள் கண்டாவளை பிரதேச செயலகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ச்சியான மழை காரணமாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஊரியான் பகுதியில் தற்காலிக வீடு இவ்வாறு சேதமடைந்தள்ளது.
குறித்த பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு கூரை விரிப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவி பொருட்களை வழங்கி வைத்தனர்.
அத்தடன் குறிதத் குடும்பத்திற்கான நிரந்தர வீடு அமைப்பதற்கான நடவடிக்கையினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளவும் பிரதேச செயலாளர் உறுதி வழங்கியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.