கிளி.கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர் சிகிச்சையில்! – தொற்றுநோயியல் வைத்தியசாலை
In இலங்கை January 16, 2021 4:04 am GMT 0 Comments 1294 by : Yuganthini

கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வைத்தியசாலை தகவல் தெரிவிக்கின்றது.
வடக்கு மாகாண தொற்று நோய் வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கொவிட்19 சிகிச்சை நிலையத்தில் 154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 96 ஆண்களும் 58பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் 5- 13 வயதுடையவர்கள் இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏழு பேரும் அடங்குவதுடன் ஏனையோர் இடை வயதுடையவர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை குறித்த சிகிச்சை நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் வெளியேறுவதாகவும் குறித்த வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட் 19 சிகிச்சை நிலையமாக கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள தொற்று நோய் வைத்தியசாலையில் சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.