கிழக்கில் அரச சேவைக்கான வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தம்
In இலங்கை January 8, 2021 6:47 am GMT 0 Comments 1351 by : Yuganthini

கிழக்கு மாகாணத்தில் 2021ம் ஆண்டின் அரச இணைந்த சேவைக்கான வருடாந்த இடமாற்றங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளது.
18/01/2021 இலிருந்து இடம்பெறவிருந்த மாகாண இடமாற்றங்கள் அனைத்தும் ஆளுநரின்பணிப்புரைக்கமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மாகாணத்தில் நிலவும் கொவிட் -19 நிலமை காரணமாக அதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும், கிழக்கு மாகாணத்தில் பரவலான பகுதிகள் முடக்கப்படுவதால் அதனை முறையாக செய்வதற்கு முடியாத காரணத்தால் அனைத்து இடமாற்றங்களையும் தற்காலிகமாக நிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.