கிழக்கு லண்டனில் ஆணொருவர் சுட்டுக்கொலை!
In இங்கிலாந்து April 9, 2019 2:39 pm GMT 0 Comments 2718 by : shiyani

கிழக்கு லண்டன் மனோர் பார்க் பகுதியில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிசூட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞரொருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆணொருவர் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டு காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவினரின் கடும் முயற்சிகள் பலனளிக்காத நிலையில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் மூன்று ஆண்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் நம்புகின்றனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்களை முன்வருமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்