குண்டுதாரிகளின் வேகத்தை மிஞ்சும் பிரதமர் – ஜே.வி.பி. கடும் சாடல்
குண்டுதாரிகள் தேவாலயங்கள் மற்றும் விடுதிகளுக்குள் குண்டு வைக்க சென்ற வேகத்தை விடவும் அதிக வேகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி சாடியுள்ளது.
அந்தவகையில், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கடும் வேகத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிறைவேற்ற முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இஸ்லாம் அடிப்படைவாத அமைப்பின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகையில், அது தொடர்பாக பிரதமர் கருத்துக்களை தெரிவிக்கும் போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாகவே கூறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் சர்வதேச பயங்கரவாதத்தைக் காட்டி இந்த நாட்டின் மக்களையும் தொழிற் சங்கங்களையும் ஒடுக்கும் திட்டங்களையே பிரதமர் மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்
-
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச ஊடகங்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல ஒரு ப