குண்டுவெடிப்பில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு

இலங்கையில் தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், 10 பேரில் 9 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன.
இதில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள எஸ்.ஆர்.நாகராஜ், எச்.சிவக்குமார், கே.ஜி.ஹனுமந்ராயப்பா, கே.எம்.லஷ்மி நாராயணா, எம்.ரங்கப்பா, வி.துளசி ராம், ஏ.மேரெகவுடா, எச்.புட்டராஜூ மற்றும் ஆர்.லக்ஷண் கவுடா ஆகிய 9 பேரின் பட்டியலை இந்தியத் தூதரகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
உயிரிழந்தோரின் உடல்கள் நான்கு தனித்தனி விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதோடு, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நட்சத்திர விடுதிகளிலும் இடம்பெற்ற பயங்கரவாதிகளின் தற்கொலைப் படைத் தாக்குதலில் 359 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் எட்டுப் பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உற
-
நாட்டில் மேலும் 428 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 749 பேருக்
-
கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும் எனவும் தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டா
-
நாட்டின் நிலைமைகள் சீராக உள்ளதை சுகாதார அமைச்சு மற்றும் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவினர் உறுதிப்படுத
-
அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்கும் முதல் நாளில் ஜோ பைடன் பல நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கத் திட்ட
-
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாத
-
2020ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படவு
-
நாட்டில் மேலும் 321 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவ
-
இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள