குண்டு வெடிப்புகளினால் அதிரும் இலங்கை – அவசரமாக இன்று கூடுகின்றது நாடாளுமன்றம்!
நாடாளுமன்றம் இன்றைய தினம் அவசரமாக கூடுகின்றது.
நேற்று முந்தினம் நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் இதுவரையில் 291 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் அளவில் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் பரபரப்பிற்கு மத்தியில் நாடாளுமன்றம் கூடவுள்ளது.
இதன்போது அடுத்தடுத்த குண்டு வெடிப்புகள் மற்றும் அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, நாட்டினை அதிரச் செய்த குண்டு வெடிப்புகள் தொடர்பாக இதுவரையில் 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பெண்களும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்