குண்டு வெடிப்புச் சம்பவங்கள்: மன்னாரில் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு
In இலங்கை April 22, 2019 8:37 am GMT 0 Comments 2512 by : Yuganthini
குண்டு வெடிப்புச் சம்பவங்களை கண்டித்த மன்னார் வர்த்தகர்கள், கறுப்புக்கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாட்டில் நேற்றைய தினம் நடத்தப்பட்டிருந்த தொடர் குண்டுத் தாக்குதல்களில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தை கண்டித்து மன்னார் பஸார் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தகர்களும், தங்களது வர்த்தக நிலையங்களை மூடி, கறுப்புக்கொடி ஏற்றி அனுதாபங்களையும் எதிர்ப்பையும் இன்று (திங்கட்கிழமை) வெளிப்படுத்தியுள்ளனர்.
இதேவேளை மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் நகர சபை உறுப்பினர்கள் சிலர் மன்னார் பஸார் பகுதியில் கறுப்புக்கொடிகளை ஏற்றி தமது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது மன்னார், பஸார் பகுதியில் கட்டப்பட்டுள்ள அனைத்து கருப்புக் கொடிகளையும் உடனடியாக அகற்றுமாறு, சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உத்தரவிட்டதோடு ஒரு சில கொடிகளையும் நீக்கியுள்ளனர்.
குறித்த பொலிஸாரின் செயற்பாட்டுக்கு, வர்த்தகர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆனாலும் பொலிஸார் அதனை கவனத்திற்கொள்ளாமல் அங்கிருந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ