குரேஷிய பிரதமருக்கு இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொவிட்-19 தொற்று உறுதி!

குரேஷிய பிரதமர் ஆன்டிரெஜ் பிளென்கோவிக்கு, இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
முன்னதாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்ட பிரதமர் பிளென்கோவிக்கின் மனைவி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன் உறுதி செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிரதமரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவில் அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. இதனால், பிரதமர் பிளென்கோ 10 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்தி கொள்ள முடிவு செய்தார்.
இந்நிலையில், பிளென்கோவுக்கு நடந்த இரண்டாவது பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், அவர் நலமாக இருப்பதாகவும் வீட்டில் இருந்தபடி தொடர்ந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.