கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தப்பியோடிய தாயைத் தேடும் நடவடிக்கை தீவிரம்
In இலங்கை November 20, 2020 4:14 am GMT 0 Comments 1627 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், தாயுடன் தப்பியோடிய மகனை எஹலியகொட பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட எஹலியகொட பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு அங்கிருந்து தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து இரண்டரை வயதான மகன் எஹெலியகொட யாய வீதியில் உள்ள வீடொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்படுள்ளார்.
இந்த நிலையில் தப்பிச் சென்ற தாயைத் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.