கொன்சவேற்றிவ் உடனான பேச்சுவார்த்தை தொடரும்: தொழிற்கட்சி
In இங்கிலாந்து April 5, 2019 5:26 am GMT 0 Comments 3003 by : Risha
பிரதமர் தெரேசா மே-யின் கொன்சவேற்றிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் தொடரும் என, தொழிற்கட்சி தெரிவித்துள்ளது.
இரு கட்சிகளுக்கும் இடையிலான இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழிற்கட்சியின் பிரெக்ஸிற் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரெக்ஸிற் உடன்பாட்டை எட்டுவது தொடர்பாக பிரதமர் மே-க்கும், தொழிற்கட்சி தலைவருக்கும் இடையே நேற்று முன்தினம் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
அதனை தொடர்ந்து இரு கட்சிகளினதும் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான இந்த பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக தொழிற்கட்சி பிரெக்ஸிற் பேச்சாளர் எவ்வித கருத்துகளையும் முன்வைக்கவில்லை.
இந்நிலையில், பிரெக்ஸிற் தொடர்பாக எவ்வித உடன்பாடும் எட்டப்படாத பட்சத்தில், பிரித்தானியா எதிர்வரும் 12ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்