கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்தல் – சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ள விடயம்
In இலங்கை November 11, 2020 10:23 am GMT 0 Comments 1711 by : Dhackshala

கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும்போது மத சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதற்கு முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலேயே மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்றவேண்டும் எனவும் அந்த சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.