கொரோனாவால் உயிரிழப்போரை தகனம் செய்யுமாறு நிபுணர் குழு பரிந்துரை – சுகாதார அமைச்சர்
In இலங்கை January 7, 2021 8:45 am GMT 0 Comments 1717 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதா அல்லது தகனம் செய்வதா என்பது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், குறித்த அறிக்கை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் பரிந்துரையானது, எந்தவொரு மத அல்லது ஏனைய காரணங்களுக்காக மாற்றப்படாமல் செயற்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அந்த அறிக்கை பிரதான குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவம் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.