கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னேற்றம்- இன்னும் சில ஆயிரம் பேரே சிகிச்சையில்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 589 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்து 30 ஆயிரத்து 772ஆகப் பதிவாகியுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றினால் இன்று ஏழு பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 12 ஆயிரத்து 264ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 770 பேர் இன்று வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை எட்டு இலட்சத்து 12 ஆயிரத்து 568ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்னும் ஐயாயிரத்து 940 பேர் மாத்திரமே சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.