கொரோனா அச்சம் – மேலும் 504 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை December 13, 2020 2:54 am GMT 0 Comments 1557 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 504 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி டுபாயிலிருந்து 144 பேரும் மாலைத்தீவிலிருந்து 31 பேரும் கட்டாரிலிருந்து 51 பேரும் அவுஸ்ரேலியாவிலிருந்து 75 பேரும் ஜப்பானிலிருந்து 203 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் தனியார் வைத்தியசாலையின் ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அவர்கள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.