கொரோனா அபாயம் – கிளிநொச்சி மாவட்ட சந்தைகளுக்கு பூட்டு
In இலங்கை December 17, 2020 8:56 am GMT 0 Comments 1689 by : Dhackshala

கொரோனா பரவல் அபாயம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சந்தைகளை மறு அறிவித்தல் வரை பூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபை ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து வர்த்தக சந்தைகளும் நாளை 18ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளன.
எதிர்வரும் நாட்கள் பண்டிகைக்காலம் என்பதாலும் யாழ்ப்பாணத்தில் சந்தை தொகுதியில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.