கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிப்பு!
In இந்தியா January 22, 2021 6:54 am GMT 0 Comments 1562 by : Krushnamoorthy Dushanthini

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட இரண்டு முன்களப் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதாகும் ஆஷா என்ற பணியாளர் கடந்த 19-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அவருக்கு கடும் தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளை பர்கார் மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது செவிலியர் ஒருவர் 16-ஆம் திகதி தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், அன்று முதல் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
இவர்கள் இருவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.