கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது – ஜோ பைடன்!

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் 20 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.
எனினும், தற்போதுவரை 21 இலட்சம் பேருக்கு மாத்திரமே கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாடு எதிர்நோக்கியுள்ள பாரிய சவாலில் இருந்து மீளெழுவதற்கான செயற்பாட்டில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜோ பைடன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.