கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றினால் இன்று இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, கலஹ பகுதியில் வசிக்கும் 72 வயதுடைய ஆணொருவர் கடந்த 27ஆம் திகதி பேராதனை, போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்குக் காரணம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொரோனா தொ்றறினால் ஏற்பட்ட மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அட்டலுகம பகுதியைச் சேர்ந்த 81 வயதுடைய பெண்ணொருவர் அவரது வீட்டில் கடந்த 28ஆம் திகதி உயிரிழந்தார்.
இவரது இறப்புக்கான காரணம் நீரழிவு மற்றும் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட உயர் இரத்த அழுத்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு 118ஆக அதிகரித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.