கொரோனா தொற்றில் இருந்து மேலும் 542 பேர் மீண்டனர்
In இலங்கை December 9, 2020 9:24 am GMT 0 Comments 1508 by : Dhackshala

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 800 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 29 ஆயிரத்து 378 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொற்றுக்கு உள்ளான 7 ஆயிரத்து 436 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான 142 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.