கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குணமடைவு!
In இலங்கை February 6, 2021 10:56 am GMT 0 Comments 1385 by : Jeyachandran Vithushan

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 133 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 594 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 850 ஆக காணப்படுகின்றது.
இதில் 4 ஆயிரத்து 913 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 505 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 343 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.