கொரோனா தொற்றில் இருந்து மீண்டார் சுகாதார அமைச்சர்
In இலங்கை February 16, 2021 11:26 am GMT 0 Comments 1153 by : Yuganthini

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.
கடந்த ஜனவரி 23 ஆம் திகதி, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி முழுமையாக தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.