கொரோனா தொற்று பரவலுக்குப் பின்னர் முதலாவது சுற்றுலாக் குழு நாட்டை வந்தடைந்தது
In இலங்கை December 28, 2020 9:17 am GMT 0 Comments 1813 by : Dhackshala
உக்ரைனிலிருந்து 185 சுற்றுலா பயணிகளுடன் கூடிய விஷேட விமானமொன்று சற்று முன்னர் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஸ்கைஅப் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றில் குறித்த பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த சுற்றுலா பயணிகள் 10 முதல் 14 நாட்கள் இலங்கையில் தங்கியிருக்க போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்று காலத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரும் பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விமானம் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதை நிறுத்தி விமான நிலையத்தை மூட அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில், இந்த விமானத்தின் வருகையுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள் இந்த திட்டத்தின் கீழ் திட்டமிட்டபடி கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதன்படி, பைலட் திட்டம் வெற்றிகரமாக இருந்தால், இலங்கை சர்வதேச விமான நிலையம் அதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விரைவாக திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.