கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக்கவசம்!

கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நிறுவனமான BioSerenity இதுகுறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளது.
Lille பல்கலைக்கழக மருத்துவமனை மையம், தேசிய சுகாதார மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பிரான்ஸ் தேசிய ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து குறித்த முகக்கவசம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய இந்த முகக் கவசத்தை 4 மணி நேரங்களுக்கு மேல் அணியக்கூடாது என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
bactericidal, antiviral chemicals cyclodextrin மற்றும் quaternary ammonia ஆகியவற்றுடன் நான்கு லேயர்களை குறித்த முகக்கவசம் கொண்டுள்ளது.
ஐரோப்பிய தரமான FFP முகக்கவசத்தை செவ்வாய்க்கிழமை முதல் 1.49 யூரோக்கள் விலையில் முன்பதிவு செய்ய முடியும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களுக்கான முகக்கவசத்தின் அறுவை சிகிச்சை வடிவம், எதிர்வரும் 22ஆம் திகதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை 0.44 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.