கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 404 பேர் பூரண குணம்
In இலங்கை November 17, 2020 9:59 am GMT 0 Comments 1601 by : Dhackshala

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 404 பேர் பூரண குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 210ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரையில் 17 ஆயிரத்து 674 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 12 ஆயிரத்து 210 பேர் குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 403 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேநேரம் கொடிய கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரையில் 61 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.