கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் உயிரிழப்பு
In இலங்கை January 5, 2021 3:14 am GMT 0 Comments 1495 by : Dhackshala
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இரு நோயாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றிரவு உறுதிப்படுத்தினார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆணொருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் கடந்த 02ஆம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்று மற்றும் நுரையீரல் நோய்த்தொற்றின் சிக்கலான நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இரத்தினபுரியைச் சேர்ந்த 86 வயதான ஆணொருவர் அவரது வீட்டில் கடந்த ஜனவரி முதலாம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா மற்றும் கால்-கை வலிப்பு நிலை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.