கொரோனா வைரஸ் பரவல் – மேலும் 195 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
In இலங்கை January 10, 2021 4:23 am GMT 0 Comments 1322 by : Dhackshala

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 195 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி, ஐக்கிய அரபு இராச்சியிலிருந்து 68 பேரும் ஜப்பானில் இருந்து 50 பேரும் கட்டாரிலிருந்து 45 பேரும் மாலைத்தீவிலிருந்து 24 பேரும் மற்றும் அவுஸ்ரேலியாவிலிருந்து 8 பேரும் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்த பயணிகளும் பி.சி.ஆர். சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.