கொழும்பின் சில பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோகத்தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) 24 மணிநேர நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை காலை 9 .00 மணி முதல் கொழும்பு 1 முதல் 3 வரையும் கொழும்பு 7 முதல் 12 வரையான பகுதிகளில் 24 மணிநேர நீர்விநியோக்கத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த பகுதியில் காணப்படும் பிரதான நீர்க்குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பபணிகள் காரணமாகவே இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.