கொழும்பில் நேற்று மட்டும் 300 பேருக்கு கொரோனா தொற்று !
In இலங்கை December 26, 2020 3:33 am GMT 0 Comments 1413 by : Jeyachandran Vithushan

இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 551 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதில் 300 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 52 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 37 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள் என்றும் நுவரெலியாவில் 28 பேரும் இரத்தினபுரியில் 27 பேரும் அம்பாறையில் 17 பேரும் கண்டியில் 16 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் மாத்தறையில் 13 பேருக்கும் திருகோணமலையில் 12 பேருக்கும் குருநாகல் மற்றும் கேகாலையில் தலா 7 பேருக்கும் முல்லைத்தீவில் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை அனுராதபுரத்தில் 5 பேருக்கும் கமபந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் தலா 4 பேருக்கும் காலியில் 3 பேருக்கும் யாழ்ப்பாணம் பொலன்னறுவை மற்றும் பதுளையில் தலா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 782 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 31 ஆயிரத்து 339 பேர் குணமடைந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 257 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 186 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.