கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்
In இலங்கை February 9, 2021 9:38 am GMT 0 Comments 1470 by : Jeyachandran Vithushan

எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலுடன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள 412 பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளது.
அந்தவகையில் திம்பிரிகசாய, ஹோமாகம, கெஸ்பேவா, தெஹிவளை, மொரட்டுவ, கொலன்னாவ மற்றும் சீதாவாக்கை பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.