கொவிட்-19: அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 50ஆயிரத்தை நெருங்குகின்றது!

அமெரிக்காவில் அதிக அளவிலான மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 50ஆயிரத்தை நெருங்குகின்றது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, அமெரிக்காவில் வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து 47ஆயிரத்து 397பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் நாடாக விளங்கும் அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக ஒரு கோடியே ஏழு இலட்சத்து எட்டாயிரத்து 630பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஒரு இலட்சத்து 42ஆயிரத்து 808பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 478பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 38இலட்சத்து 12ஆயிரத்து 554பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 18ஆயிரத்து 683பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் மொத்தமாக 66இலட்சத்து 48ஆயிரத்து 679பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.