கொவிட்-19: இதுவரை இல்லாத அளவு ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு பதிவானது!

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 27ஆயிரத்து 543பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 496பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக மாறியுள்ள ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 22இலட்சத்து 15ஆயிரத்து 533பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 38ஆயிரத்து 558பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 64ஆயிரத்து 801பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 17இலட்சத்து 12ஆயிரத்து 174பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.