கொவிட்-19 தொற்று பரவல் தீவிரம்: மலேசியாவில் மீண்டும் முழுமையான பொது முடக்கம்!

மலேசியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், அங்கு முழுமையான பொது முடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வழியாக உரையாற்றிய மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின், நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
தற்போது 5 மாநிலங்கள் மற்றும் 3 கூட்டரசுப் பிரதேசங்களில் முழுமையாகவும், ஆறு மாநிலங்களில் நிபந்தனைகளுடன் கூடிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையும் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர், பினாங்கு, மலாக்கா, ஜோகூர் பாரு, சபா, புத்தரா ஜெயா, லாபுவான் ஆகிய பகுதிகளில் நாளை நள்ளிரவு முதல் லாக்டவுன் உத்தரவு அமுலுக்கு வருகிறது.
ஜனவரி 13 முதல் 26ஆம் திகதி வரை இந்த நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.