கொவிட்-19: பிரித்தானியாவில் ஒரேநாளில் 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
In இங்கிலாந்து December 31, 2020 5:48 am GMT 0 Comments 1736 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 50ஆயிரத்து 23பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 981பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 6ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 24இலட்சத்து 32ஆயிரத்து 888பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 72ஆயிரத்து 548பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 847பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.