கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 54,940பேர் பாதிப்பு- 563பேர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து January 11, 2021 5:26 am GMT 0 Comments 1859 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 54ஆயிரத்து 940பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 563பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், 30இலட்சத்து 72ஆயிரத்து 349பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 81ஆயிரத்து 431பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 15இலட்சத்து 83ஆயிரத்து 951பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 98பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14இலட்சத்து ஆறாயிரத்து 967பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.