கொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40,261பேர் பாதிப்பு- 1,401பேர் உயிரிழப்பு!
In இங்கிலாந்து January 23, 2021 6:47 am GMT 0 Comments 1748 by : Anojkiyan

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயிரத்து 261பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 401பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 35இலட்சத்து 83ஆயிரத்து 907பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 95ஆயிரத்து 981பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து 87ஆயிரத்து 304பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 960பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 622பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.