கோட்டாவால் மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்துவிடும் – ஷிரந்தியே வேட்பாளர்!
In இலங்கை April 7, 2019 12:04 pm GMT 0 Comments 3788 by : Jeyachandran Vithushan
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டால், மஹிந்தவின் அரசியல் முடிவுக்கு வந்து விடும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கோட்டா அரசியலுக்குள் வந்தால் மஹிந்தவின் அரசியலில் தளம்பல் ஏற்பட்டு அதன் பின்னர் அரசியல் கேந்திர நிலையமாக கோட்டாபய ராஜபக்ஷ மாறிவிடுவார் என கூறிய அவர், இதனால்தான் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாவை ஒரு சமயம் தூக்கி வைத்திருப்பதாகவும் அதன் பின்னர் கீழே எறிகின்றார் எனவும் தெரிவித்தார்.
எனவேதான் மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாவை வேட்பாளராக நிறுத்த போவதில்லை என்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது எனவும் கே.டி.லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கோட்டாவை வேட்பாளராக நிறுத்த எவரெவர் முயற்சிகளை மேற்கொண்டாலும் ஷிரந்தி ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றினால் உயிரிழந்தவர
-
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதும் மக்களுக்கு அதனை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க
-
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்பதை விவ
-
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க முன்வருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களி
-
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிசோதனை முன்னெடுக்கப்படும் பொலிஸார் ஊடகப்பேச்சாளர்
-
நாட்டில் மேலும் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிற
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70ஆயிரத்தைக் க
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ள விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர்புகைக்
-
நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங்கள் காப்பாற்றும் என நடிகை வித்யா பாலன் தெரிவ