கோட்டாவிற்கு எதிராக வழக்கு – உறுதிப்படுத்தியது மொட்டு அணி!
In ஆசிரியர் தெரிவு April 9, 2019 3:57 am GMT 0 Comments 2348 by : Benitlas
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினை மொட்டு அணி உறுதிப்படுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜி.எல் பீரிஸ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என்று கருதப்படும் பின்னணியிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க குடியுரிமையைக் கைவிடும் கோட்டபாய ராஜபக்ஷவின் முடிவுக்கு தடையை ஏற்படுத்தவே, அவருக்கு எதிராக இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
லசந்த விக்ரமதுங்க 2009 ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பின்னர் அவர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிற்கு சென்று வந்திருந்த போதும், தற்போதே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்