க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை
In இலங்கை February 15, 2021 9:48 am GMT 0 Comments 1281 by : Dhackshala

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் ஆகியவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.