சட்டத்தரணிக்கு கொரோனா- கேகாலை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தம்
In இலங்கை December 15, 2020 9:01 am GMT 0 Comments 1421 by : Yuganthini

கேகாலை நீதவான் நீதிமன்றில் கடமையாற்றும் சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை நீதிமன்றத்தின் அனைத்து செயற்பாடுகளும் இன்று (திங்கட்கிழமை) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்ற கட்டடத் தொகுதியை கிருமி தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சட்டத்தரணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.