‘சித்திரை மாத உறுதிமொழி’ மேற்கொள்ளப்பட்டது (2ஆம் இணைப்பு)
In இலங்கை April 3, 2019 3:11 am GMT 0 Comments 3003 by : Dhackshala

போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாட்டிற்கான ‘சித்திரை மாத உறுதிமொழி’ மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘சித்திரை மாத உறுதிமொழி’ – அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு
போதையிலிருந்து விடுதலைப்பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியெடுக்கும், ‘சித்திரை மாத உறுதிமொழி’ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (புதன்கிழமை) காலை சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பங்குபற்றவுள்ளனர்.
அத்தோடு மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
போதைப்பொருள் அழிவிலிருந்து நாட்டை விடுதலை செய்து, சௌபாக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் இந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.
இந்த தேசிய பணியை மேலும் வெற்றிக்கொள்ள, எவ்வித பேதங்களுமின்றி அனைத்து இலங்கையர்களையும் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி ஊடக பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை 08.30 மணி முதல் 08.34 மணிவரை அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், காலை 08.30 முதல் 08.32 வரை சிங்கள மொழியிலும் 08.32 முதல் 08.34 வரை தமிழ் மொழியிலும் உறுதிமொழி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்தவாறே சித்திரை மாத உறுதிமொழியுடன் இணைந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.