சித்ராவின் மரணம் கொலையா? தற்கொலையா? : உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகின!
In சினிமா December 10, 2020 11:06 am GMT 0 Comments 1336 by : Krushnamoorthy Dushanthini

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் எனப் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்டத் தகவலில் தெரிய வந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் சித்ராவின் உடல் இறுதிச் சடங்குக்காக அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சித்ராவின் மரணம் தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை எனவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் அவரின் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அவர் தற்கொலை செய்துக்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.