சினோபோர்ம், ஸ்பூட்னிக் வி தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க மேலதிக விவரங்களை கோரும் இலங்கை!
In இலங்கை February 8, 2021 2:05 pm GMT 0 Comments 1409 by : Jeyachandran Vithushan

சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்க அந்நாடுகளிடம் மேலதிக விவரங்களை இலங்கை கோரியுள்ளது.
சீனாவின் சினோபோர்ம் மற்றும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மதிப்பாய்வு செய்யும் பணியை கடந்த வாரம் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அந்தந்த நாடுகளிடமிருந்து மேலதிக விவரங்களை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு கோரியுள்ளது என ஐ.டி.எச். வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
300,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசியை வழங்க சீனா ஒப்புக் கொண்டுள்ள அதேவேளை ரஷ்யாவும் தங்கள் தடுப்பூசியை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குறித்த இரு நாடுகளின் கொரோனா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.