சிரியா முகாமில் இருந்து 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐ.நா. கோரிக்கை!

வடகிழக்கு சிரியாவில் ஒரு பெரிய முகாமில் சிக்கித் தவிக்கும் 27,000 குழந்தைகளை தாயகத்திற்கு திருப்பி அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் விளாடிமிர் வொரோன்கோவ், கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த குழந்தைகளில் பலர் ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளை ஒரு காலத்தில் கட்டுப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எல் போராளிகளின் மகன்கள் மற்றும் மகள்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்புத் தலைவர் விளாடிமிர் வொரோன்கோவ், ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் முறைசாரா கூட்டத்தில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘அல்-ஹோல் முகாமில் குழந்தைகளின் கொடூரமான நிலைமை இன்று உலகில் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும். முகாம்களில் 60 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் உள்ளனர்.
குழந்தைகள் நெகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், சமூகங்களில் மீண்டும் ஒன்றிணைவதற்கு ஆதரவளித்தால் வன்முறை அனுபவங்களிலிருந்து மீள முடியும் என்றும் வரலாறு காட்டுகிறது” என கூறினார்.
ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் நிர்வாக இயக்குனர், குழந்தைகள் “முதன்மையாக பாதிக்கப்பட்டவர்களாக கருதப்பட வேண்டும்” என்றும், இளைஞர்களை தடுத்து வைக்கவோ அல்லது வழக்குத் தொடரவோ கூடாது என்றும் வலியுறுத்தினார்.
நாட்டில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த சிரியர்களுக்கான மிகப்பெரிய முகாமான அல்-ஹோல் தற்போது கிட்டத்தட்ட 62,000 குடியிருப்பாளர்களைக் கொண்டுள்ளது என்று ஐ.நா மனிதாபிமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள், ஐ.எஸ்.ஐ.எல் போராளிகள் தங்கள் கடைசி சிரிய கோட்டையை 2019இல் இழந்த பின்னர் அங்கு தப்பி ஓடிய பலர். வடகிழக்கில் பல முகாம்களில் உள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.