சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கை!

சிறு போகத்தின் போது கைவிடப்பட்டுள்ள 50 ஆயிரம் ஏக்கர் வயலில் மீண்டும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல். அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுவரைடி 1 இலட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய திட்டத்தின் பிரகாரம், மேல் மாகாணம் மற்றும் மேலும் தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட வயல்களில் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.