சிறைச்சாலையில் 4140 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி !
In இலங்கை January 12, 2021 7:57 am GMT 0 Comments 1338 by : Jeyachandran Vithushan

சிறைச்சாலையில் கொரோனா தொற்று உறுதியான கைதிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சிறைச்சாலைகளில் தொற்று உறுதியானவர்களில் 4,140 கைதிகளும் 129 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் அடங்குவதாக
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 3,777 கைதிகளும் 121 அதிகாரிகளும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
மேலும் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 354 கைதிகளும் எட்டு அதிகாரிகளும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.